Health

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் மூலிகை மோர்!!

அறிகுறி :

இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குமட்டலும் வாந்தியும் வரும்.

அறிகுறி :

யாருக்கெல்லாம் அல்சர் தாக்கும் வாய்ப்புள்ளது ? புகை பிடிப்பவர்களுக்கு, புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, வாயுக் கோளாறினால் அவதிபப்படுபவர்களுக்கு, அதிக ஸ்ட்ரெஸினால் இருப்பவர்களுக்கு, காலை உணவை தவறு விடுபவர்களுக்கு, எப்போதும் சுயிங்கம் மெல்பவர்களுக்கு, என இவர்களுக்கெல்லாம் அல்சர் தாக்கும் ஆபத்து உள்ளது.

யாருக்கெல்லாம் அல்சர் தாக்கும் வாய்ப்புள்ளது ?

மூலிகை மோர் :

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், போன்றவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதிலிருந்து தினமும் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் நாளடைவில் அல்சர் குணமாகும்

பெஸ்ட் சூப் :

இதே அகத்திக் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம்,மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக்குடிக்கலாம்.

பெஸ்ட் சூப் :

தினமும் இதை செய்ங்க:

துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்து கடைந்துகொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.

தினமும் இதை செய்ங்க:

அருகம்புல் :

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதால் அல்சர் மட்டுமல்ல பலப் பிரச்சனைகள் சரியாகும். வியாதிகள் வராமலும் தடுக்கும். இதனை குடித்து 1 மணி நேரத்திற்கு பின் உணவை சாப்பிடுங்கள்.

பூசணிக்காய் :

பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டுஅரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்துஅப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.

பூசணிக்காய் :

மாதுளம்பழ ஜூஸ் :

மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்துசாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Image result for மாதுளை பழம் ஜூஸ்

நெல்லிக்காய் ஜூஸ் :

நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆறும். அது அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை பெற்றது.

நெல்லிக்காய் ஜூஸ் :

மூலிகைப் பொடி :

ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்குதினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவைதேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

மூலிகைப் பொடி :

மணத்தக்காளி :

மணத்தக்காளியும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. மணத்தக்காளி கீரையை வாரம் 3 நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை கிடைக்கவில்லையென்றால் மணத்தக்காளி வற்றலை கடைகளில் வாங்கி அடஹ்னை வற்றல் குழம்பாகவும், பொரித்தும் தினமும் சாப்பிடுங்கள்.

மணத்தக்காளி :

தேங்காய்ப் பால் :

தேங்காய்பாலை தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுவதுடன், புண்களும் விரைவில் ஆறும். தேங்காயையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்ப் பால் :

வாழைப் பழம் :

பச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பாதிப்படைந்த மெல்லிய சவ்வுத்தோல்களை மீண்டும் விரைவில் வளரச் செய்யும், புண்களையும் ஆற்றிவிடும்.

வாழைப் பழம் :

வேப்பிலை கொழுந்து :

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை கொழுந்தை சிறிதளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறுவதுடன், வயிற்று பாதிப்புகளையும் நீக்கும்.

வேப்பிலை கொழுந்து :
அரிசி கஞ்சி :

சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டு வாருங்கள். பி காம்ப்ளக்ஸ் சத்து முழுவதும் கிடைக்கும். இதனால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

 அரிசி கஞ்சி :

முட்டைக் கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

முட்டைக் கோஸ் :

கொத்துமல்லி :

இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

Dabur Woman Restorative Tonic

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *